Categories: தமிழகம்

கோவையில் காவு வாங்கும் புதிய மேம்பாலம் : திருச்சி சாலை மேம்பாலத் தடுப்பில் மோதி சுயநினைவு இழந்த இளைஞர்… போலீசார் ஆய்வு!!

திருச்சி சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்படும் நிலையில் இன்று இளைஞர் ஒரு தவறி விழுந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் ஆய்வு நடத்தி வருகின்றார்.

கோவை ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சில தினங்களுக்கு முன் 2 மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் திறப்பட்ட முதல் நாளிலேயே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் (வயது 24) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் சுங்கம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர் மேம்பால தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவு இழந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் தலைமையில் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு வழி சாலையாக உள்ள இந்த பாதையில் சிலர் எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதாகவும், இதனாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் வேகத்தடைகள் அமைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு வேகத்தடை ஒளிரும் விளக்குகளுடன் பொருத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.