குன்னூரில் உள்ள நவராத்திரி மகா உற்சவ கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவியின் முகத்தில் திடீரன தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ரா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, ஆன்மிகம், சுற்றுச்சூழல், கலாசார சேவை வழங்குகிறது, தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
நீலகிரி மக்களுக்கு இலவச, உயர்தர சுகாதார சேவையை தொடர்ந்து பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட மருத்துவமனை இங்கு செயல்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற சாய் தர்மக்ஷேத்ராவில், நவராத்திரி மகா உற்சவ் விழா துவங்கியது.
துவக்க விழாவான இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பாடல் நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும், கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர் வாயில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீயில் அதை ஊத முயன்றார். அப்போது, திடீரென மாணவியின் முகம் மற்றும் வாய் பகுதியில் தீ பற்றியது.
இதனால் நிலை குலைந்து மாணவி துடித்தார். உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அனைக்க முயன்றனர். தீயை அனைத்து காயங்களுடன் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கி நடைபெற்றது.
.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.