கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து அமைச்சர்கள் தலைமை ஏற்க வேண்டும் என பா.ஜ.,எம்.எல்.ஏ.,காந்தி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்து மதநம்பிக்கை இல்லாதவர்கள் கலந்து கொள்ள தமிழக அரசும் , இந்து அறநிலைய துறையும் அனுமதிக்க கூடாது என நாகர்கோவில் தொகுதி எம். எல். ஏ.,எம்.ஆர் காந்தி தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட பாஜக மேல்புறம் ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் கழுவன்திட்டையில் நடைபெற்றது பாஜக ஒன்றிய தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி , மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பாஜக பல நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் காந்தி இந்து ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்துவது அரசு மற்றும் அறநிலைய துறையின் கடமை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நூற்றாண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்து கோயில்களில் யார் வேண்டுமானாலும் வரலாம் வணங்கலாம்.
ஆனால் ஆலய நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவதோ துவங்கி வைப்பதோ இந்து ஆலயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பங்கேற்க கூடாது ஆக இந்து அமைச்சர்கள் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்சி தலைமையேற்க அறநிலைய துறை மற்றும் தமிழக அரசு அனுப்பி வைப்பார்கள் என நம்புவதாக பேட்டியின் போது தெரிவித்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.