கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று ஊரடங்கு என்பதால் ரயில் நிலையம் வந்த தொழிலாளர்கள் ரயிலுக்காக தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு ஒமிக்ரான் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த நேரத்திலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற நிலையில், பல்வேறு தொழில் நிறுவனத்தினரும் அச்சமடைந்துள்ளனர். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இங்கு பணியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இந்த சூழலில் கோவையில் பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சூழலில் கோவை ரயில் நிலையம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலுக்காக காத்திருக்கும் இந்த தொழிலாளர்கள், ரயில் வரும் வரை சாலையோரங்களில் அமர்ந்து உணவுக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.