வேட்புமனு தாக்கலின் போது தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திணறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி கூட சரியாக படிக்க தெரியாமல் திணறிய வேட்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லிக் கொடுத்து உறுதிமொழி எடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
வேட்பாளர் உறுதிமொழி படிக்க கொடுத்த போது, அதை படிக்க முடியாமல் திணறினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி எடுத்து படிக்கும் பொழுது, கூடவே நாம் தமிழர் கட்சியினர் படித்தார். அப்போது, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழில் உறுதிமொழியை கூட படிக்க முடியாமல் வேட்பாளர் மனு தாக்கல் செய்தது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழ் தெரியாது என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியுமா..? என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.