திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குமரன் வணிக வளாகம், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் , பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளது.
இப்பகுதிகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு ஏற்கனவே வாடகைத் தொகை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இதுவரை நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேரில் சென்று சீல் வைக்கப்பட்டது .
தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள 17 கடைகளில் கடைகளின் வாடகை தொகை செலுத்தாதன் காரணமாக 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது . 26 லட்சம் வாடகை நிலுவை இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாநகராட்சி பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.