நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு வாட்டாக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (60). ஈயம் பூசும் தொழில் செய்யும் சேகர் தலைஞாயிறு காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மகன் சபரீஷ் மற்றும் அருள்ராஜா ஆகியோர் நீரில் மூழ்கியும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்த நிலையில், இவரது மனைவி குமுதம் (56) கடந்த மாதம் 13 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
மனைவியின் துக்கநிகழ்வில்கூட பங்கேற்காத கணவர் சேகர், தனது மாற்று திறனாளி மகள் சிவகாமசுந்தரியை வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் படிக்க வைத்துள்ளார். இதனிடையே, குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித்திரிந்த சேகர், யாரை பார்த்தாலும் தான் தீக்குளிக்க போகிறேன் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகைதந்த அவர், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீவைத்துகொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி ஏறிந்ததை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அனைத்து முதியவரை காப்பாற்றினர். ஆனால் 80 சதவீத தீக்காயங்களுடன் முதியவர் முழுவதும் எரிந்ததால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார், அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.