விருதுநகர்: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆன லாரியின் மீது ஆம்னி பஸ்சும் காரும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவில் லாரி மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஞ்சர் ஆனதால் லாரி ஓட்டுநர் ஓரமாக நிறுத்தி மாற்று டயர் மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் நின்றுகொண்டிருந்த லாரியில் பின்னால் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
அதே வேகத்தில் பின்னால் வந்த கார் ஆம்னி கார் பின்னால் அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் (40) உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்னி பஸ் ஓட்டுநர் தூத்துக்குடியை சேர்ந்த உதயகனி மற்றும் பேருந்தில் பயணம் செய்து தங்கமாரியப்பன் ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தால் மதுரை – தூத்துக்குடி நான்கு வழி சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.