கேப்டன் மறைந்து 30வது நாள்… தேமுதிகவை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அஞ்சலி!
தேசிய முற்ப்போக்கு திராவிட கழக முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் -28ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனால் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இதனால் சென்னை தேமுதிக கட்சி அலுவலகம், இராஜஜி திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்க்காக வைக்கப்பட்டது அப்போது தமிழக முதல்வர் , மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என 25 லட்சத்துக்கும் மேல் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தனர். பின்பு சென்னை தேமுதிக தலைமை கழக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் பூத உடல் புதைக்கப்பட்டது.
தற்போது வரை அங்கு தினந்தோறும் 1000 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையின் கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்று உடன் 30 நாள் ஆகிறது.
இதனால் இன்று தேமுதிக மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டன் தலைமையில் மேல ஆவணி மூல விதி பகுதியில் உள்ள மதுரை தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு கேப்டன் விஜகாந்த் படத்திற்கு முன்பு 30க்கும் மேற்ப்பட்டோர் மொட்டை அடித்து, மலர்கள் துவி விளக்கு ஏற்றிய தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர் இதில் நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 1000 க்கும் மேற்ப்பட்ட பொது மக்களுக்கு அண்ணதானம் வழங்கினர்.
முன்னதாக ஜெய்ஹிந்த்புரத்தில் தேமுதிக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.