சென்னை வெங்காய வியாபாரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(30), இவர் வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு, வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். கரூர் ஐந்தாவது குறுக்கு வீதியை சேர்ந்த நந்தகுமார், அவரது மனைவி ஸ்ரீதேவி சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாராக்கல்லூரியில் காய்கறி கடை வைத்துள்ளார்.
அந்தக் கடைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விக்னேஷ் 30 லட்சம் ரூபாய்க்கு வெங்காயம், பூண்டு வினியோகம் செய்துள்ளார். அந்த பணத்திற்கு தம்பதியர் மூன்று காசோலைகளை வழங்கினர். அதில் பணம் இல்லை என வங்கியில் இருந்து திரும்பியது. இதுகுறித்து விக்னேஷ் பலமுறை கேட்ட நிலையில் தம்பதிகள் பணத்தை தர மறுத்துள்ளனர்.
இதுகுறித்து விக்னேஷ் சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த நிலையில் தம்பதியர்கள் இருவரும் தலைமறைவாகினர்.
இந்த நிலையில் கரூரில் இருந்த நந்தகுமார், ஸ்ரீதேவியை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.