திருச்சி திருச்சி அருகே கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே உள்ள கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (58). இவருக்கு முத்துலட்சுமி (47), என்ற மனைவியும் சிவக்குமார் (27), சூரிய பிரகாஷ் (22) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சேகர் இரண்டு நிதி நிறுவனங்களில் சுமார் 25 லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். மாதந்தோறும் தவணை தொகையை சாரியாக கட்டி வந்த அவர், தொடர்ந்து பணம் கட்ட முடியாததால் வீட்டை விற்று பணம் தருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று தஞ்சை ரோடு தர்பார் மேடு மாரியம்மன் கோயில் அருகிலுள்ள அவரது வெல்டிங் கடைக்குச் சென்ற தனியார் கடன் நிறுவன ஊழியர்கள் பணத்தை கட்ட வேண்டும் என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவமானம் தாங்க முடியாததால் சேகர் நீதிமன்ற அருகில் பெட்ரோல் ஊற்றி தாக்கு தானே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த செஷன் கோர்ட் காவல் நிலைய காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.