பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் திடீர் பெய்த மழை காரணமாக பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பலத்த காற்றுடன் பெய்தது.
இதனால் நெய்க்காரப்பட்டியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று பலத்த காற்றில் தானாக நகர்ந்து சாலையின் குறுக்கே சென்று இருசக்கர வாகனத்தை மோதி விட்டு செல்லும் சிசிடிவி காட்சிகளும், உரிமையாளர் வாகனத்தின் பின்னே ஓடி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேலும் சாலையில் எந்த வாகனங்களும் குறுக்கே வராததால் நல்வாய்ப்பாக எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.