திண்டுக்கல் ; பழனியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகுராம்(46) – உஷா(44) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில்,நேற்று பழனிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று அறைக்கு சென்றவர்கள் இன்று மாலை 5 மணி ஆகியும், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விடுதிக்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரகுராம், உஷா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் சிறிய விஷயத்திற்காக 10 பேர் கொண்ட நபர்கள் தங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தங்களுடைய தற்கொலைக்கு இந்த 10 பேர் தான் காரணம் என்றும், கேரளாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.