பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா மாலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதையொட்டி, சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் விமர்சியாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. நாளை மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற உள்ளது.
பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்திற்க்கு வருகை தந்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.