பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளித்தேரில் ஏறி வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி – தெய்வானையுடன் தம்பதி சமைதராக வெள்ளி எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசாமி, நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.