Categories: தமிழகம்

5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க ஊராட்சி மன்ற செயலாளர் முயற்சி… விவசாயி குடும்பத்தினர் மீது தாக்குதல்.. தருமபுரியில் அதிர்ச்சி!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே திப்பிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மலர்விழி மற்றும் மகன் மோகிநாத் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான சந்தனூர் மேடு பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் நிலத்தின் அருகே மகாலிங்கம் என்பவருக்கு சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார். இதனால் குமாரிடம் உங்களிடம் உள்ள விவசாய நிலத்தை தந்து விடும்படி பல முறை கேட்டுள்ளார்.

இதற்கு தரமறுத்த குமாரை பல நாட்களாக அடியாட்களை வைத்து தாக்கி உள்ளார். இதகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.

இந்நிலையில் கடந்த 15 ந் தேதி குமார் தனது நிலத்தை உழுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மகாலிங்கம் தனது அடியாட்களை அனுப்பி குமார் அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் கடுமையாக தாக்கி உள்ளார்.
இதில் குமாரின் பல் பிடுங்கபட்டும், மகனின் கை உடைக்கபட்டும் மனைவி மலர்விழியினை கடுமையாக தாக்கபட்டும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

இதகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற செயலாளரை அழைத்து சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

தங்களுக்கு நிரந்த தீர்வு காணப்பட வில்லை எனவும், தங்களை தாக்கிய மகாலிங்கம் மற்றும் அவரது அடியாட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர். குமாரின் குடும்பத்தினரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

7 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

8 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

8 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

8 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

9 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

9 hours ago

This website uses cookies.