சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டும், மேலும் கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆதார மாகக் கொண்டும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ சார் தொடர்ந்து கலவ ரத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூலை 13ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பள்ளி சார்பில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவி செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கர். ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்திகா என ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
இவர்களுக்கு ஆக., 26ல் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இவர்களில் ஆசிரியைகள் சேலத்தில் தங்கியும், தாளாளர், செயலர், முதல்வர் மதுரையில் தங்கியும் நான்கு வாரங்கள் கையெழுத்திட நிபந்தனை விதித்தது.
கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தற்போது ஆன்லைனில் மட்டுமே கல்வி கற்கப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தில் சேதமடைந்த பள்ளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மனு அளிக்க வந்துள்ளனர்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.