மகன் இறந்த துக்கம் தாளாத நிலையில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி வக்தசலா. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடம்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர், நேற்று அறையைக் காலி செய்யச் சொல்வதற்காக ஹோட்டல் ஊழியர், பழனிச்சாமி தம்பதி தங்கியிருந்த கதவை தட்டிப் பார்த்து உள்ளார்.
ஆனால், கதவை யாரும் திறக்கவில்லை. பின்னர், மாற்று சாவியைக் கொண்டு வந்து அறையைத் திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, அவர்கள் வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
பின்னர், உடனடியாக இது குறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் குடிச்சுட்டு கும்மாளம் அடிச்ச பிரபல நடிகர்கள்… சம்பவம் செய்த விஜயகாந்த்!
அதேநேரம், இது தொடர்பாக உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர், பின்னர், இது தொடர்பான விசாரணையில், தம்பதியின் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சல் வந்து உயிரிழந்து உள்ளார். இதனால் தம்பதி இருவரும் மனமுடைந்து இருந்தது தெரிய வந்தது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.