பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் கிடையே தகராறு பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் கோட்டாட்சியரின் முன்பாகவே தள்ளுமுள்ளு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பழவேற்காடு அடுத்த கோட்டை குப்பம், நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக் குப்பம், பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புது குப்பம், அண்ணாமலைச்சேரி குப்பம், அவுரிவாக்கம் மேல் குப்பம், அவுரிவாக்கம் கீழ் குப்பம் ஆகிய கிராம மக்கள், பூர்வீகமாக பழவேற்காடு ஏரியில் மீன் பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலில் மீன்பிடி தொழில் செய்யும் கூனங்குப்பம் கிராமத்தினர், 10 கிராம மீனவர்களுக்கு உரிமையான பாட்டில் (பாடு) கடல் வலைகளான இறால் வலை, நண்டு வலைகளை விட்டு தொழில் செய்வதாகவும், இது சம்பந்தமாக கடந்த ஜூன் மாதம் மீன்வளத்துறையில் அதிகாரிகளிடம் மீனவ கிராம மக்கள் மனு கொடுத்ததாகவும், ஆனால் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சு வார்த்தையில் மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரகளை ஏற்பட்டது.
நேற்று இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தை கோட்டாட்சியர் காயத்ரி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டதால், இரு தரப்பினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, மீனவர்கள் அங்கிருந்து சென்றனர்.
சட்ட மன்ற உறுப்பினர், கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் மீனவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.