தருமபுரி : பென்னாகரம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 6 நாட்களாகியும் இறக்கப்படாததால் தேசப்பற்றாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், 33 கிராம ஊராட்சி, இரண்டு பேரூராட்சிகளை உள்ளடக்கியது. பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் சார்பதிவாளர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி புதன்கிழமை நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
குடியரசு தினம் முடிவுற்று 6 நாட்களாகியும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இரவு பகலாக பறந்த நிலையில் உள்ளது. தற்போது வரை இறக்கப்படாமல் கொடிக்கம்பத்தில் உள்ளது. குடியரசு தின விழாவில் அரசு அலுவலகங்களில் காலை 7 மணிக்கு கொடிகள் ஏற்றப்பட்டு மாலை 5 மணிக்குள் கொடி இறக்கப்பட வேண்டும் என்பது மரபு இருப்பின் சட்டமன்ற அலுவலகத்தில் இன்றுவரை தேசியக்கொடி இறக்கப்படாதது வேதனை அளிப்பதாக தேசியப் பற்றாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.