தருமபுரி : பென்னாகரம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 6 நாட்களாகியும் இறக்கப்படாததால் தேசப்பற்றாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், 33 கிராம ஊராட்சி, இரண்டு பேரூராட்சிகளை உள்ளடக்கியது. பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் சார்பதிவாளர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி புதன்கிழமை நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
குடியரசு தினம் முடிவுற்று 6 நாட்களாகியும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இரவு பகலாக பறந்த நிலையில் உள்ளது. தற்போது வரை இறக்கப்படாமல் கொடிக்கம்பத்தில் உள்ளது. குடியரசு தின விழாவில் அரசு அலுவலகங்களில் காலை 7 மணிக்கு கொடிகள் ஏற்றப்பட்டு மாலை 5 மணிக்குள் கொடி இறக்கப்பட வேண்டும் என்பது மரபு இருப்பின் சட்டமன்ற அலுவலகத்தில் இன்றுவரை தேசியக்கொடி இறக்கப்படாதது வேதனை அளிப்பதாக தேசியப் பற்றாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.