சென்னையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – பாரிமுனையில் வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வழக்கம் போல இன்று காலை பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த ஒருவர், ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று சாமி சிலையை பார்த்து கூறியபடி, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவில் மீது தூக்கி எறிந்தார். இதனால், அப்பகுதி தீப்பற்றி எரிந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவிலின் எதிரே உலர் பழங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருவதும், மதுபோதையில் இருந்த அவர், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.