கோவில்பட்டி அருகே கயத்தாறில் தந்தையை வெட்டி கொலை செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சுப்பா நாயக்கர் மகன் தசரதன் (வயது 52). இவரது மகன் அஸ்வத் குமார் (வயது 30). இவர் பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அஸ்வத் குமாருக்கு திருமணம் ஆகி அருணா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 2வது பெண் குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது. கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் கூட்டுப் பண்ணை கிராமத்தில் அருணா தன்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த மூன்று மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்வத் குமார் தன்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று கூட்டுப் பண்ணை கிராமத்துக்கு சென்றுள்ளார். குழந்தைகளை தந்தையிடம் காண்பிக்க தாய் அருணா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அஸ்வத் குமார் நேற்று இரவு கடம்பூரில் உள்ள தனது தந்தை தசரதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் காலை மனைவியை சந்திப்பதற்கு கிராமத்துக்கு சென்று குழந்தைகளை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வத் குமாரின் தந்தை தசரதன் கடம்பூரில் இருந்து புறப்பட்டு கூட்டுப்பண்ணை கிராமத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு தந்தை தசரதனுக்கும், மகன் அஸ்வத் குமாருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படவே, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஸ்வத் குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தை தசரதனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தசரதன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் அஸ்வத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தனது தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.