கோவை: நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் தோட்ட வேலியில் மின்சாரம் பாய்ச்சி ஆண் யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் கிராமம் வரப்பாளையம் பகுதியில் மனோகரன் நிலத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதிதோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியில் மின்சாரத்தை பாயச்சி ஆண் காட்டு யானை கொல்லப்பட்டது.
இதுகுறித்து, வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய தோட்ட உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் தலைமறைவான நிலையில் வனத்துறை சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக பதுங்கியிருந்து நீதிமன்றங்களில் பலமுறை முன் பிணை கோரியும், நீதிமன்றங்களால் அவைகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை வந்த மனோகரன் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பன்னிமடை பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து வனத்துறை தனிப்படை குழுவினரால் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.