Categories: தமிழகம்

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி? ஊற வைத்த போது அதிர்ச்சி… முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு!!!

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி? உலை வைத்த போது அதிர்ச்சி… முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ரேஷன் கடையில் கலந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது.

இந்த அரிசி வாங்கி சென்ற பொதுமக்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த போது அதில் ஒரு சில அரிசிகள் அப்படியே மேலே மிதந்து வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பதறி அடித்து கொண்டு எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டனர்.

உடனே அங்கிருந்த விற்பனையாளர் பொதுமக்களிடம் கடந்த இரண்டு மாதங்களாக அரிசியில் செறிவு ஊட்டப்பட்ட அரிசி தான் வழங்குகிறது .அந்த அரிசியை தான் வழங்கப்பட்டது. அந்த அரிசியை சாப்பிட்டால் சற்று கூடுதலான சத்து கிடைப்பதாக மேல் அதிகாரிகள் எங்களிடம் கூறியிருந்தார்கள்.

ஆகையால் பயப்படாமல் அரிசியை கீழே போடாமல் சாப்பிடலாம் என்று கூறினார். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல் முற்றுகை ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடனடியாக இதுகுறித்து நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரியிடம் கூறப்பட்டது. உடனடியாக பொதுமக்களிடம் இதுகுறித்து அரசு தரப்பில் வழங்கப்பட்ட அரிசி தான் வழங்கப்பட்டுள்ளது அதில் சத்துக்கள் நிறைந்த அரிசியாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக இது பிளாஸ்டிக் கலந்த அரிசி அல்ல எனக்கூறி சமரசம் செய்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வழங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி ஆக இருக்கும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

எனவே இது குறித்து தக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

படவிளக்கம். பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் அரிசி எனக் கூறி பொதுமக்கள் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.