முல்லை பெரியாறு அனையில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருவதால், மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக் கூடாது. ஒரே வீட்டில் இரண்டிற்கு மேல் மின் இணைப்பு இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றும் மின்சார வாரியத்தின் நடவடிக்கை கண்டிதக்கது என கூறினார்.
மின் இணைப்பு ஒரே மின் இணைப்பாக மாற்றும் போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் பாதிக்கப்படுமெனவும், இதனால் வீடு வாடகைக்கு விடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டனத்தை உயர்த்தி ஆணை வெளியிட்டது.
மேலும் படிக்க: கடவுள் நம்பிக்கை இல்லாத போது கோவில் நிர்வாகம் மட்டும் எதுக்கு..? திமுகவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
பாமகவின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணம் கடந்த ஆண்டு வீடுகளுக்கு ஜுலை மாதத்தில் உயர்த்தாமல், வணிக கட்டணங்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தியது, மின் கட்டணம் உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் மின்சார வாரிய மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருவதால், மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை வலிமையாக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருந்தும் கேரள அரசு முல்லை பெரியாறு அணையில் மீண்டும் மீண்டும் அணை கட்ட முயற்சி செய்து வருவதை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.