Categories: தமிழகம்

கொங்கு மண்டலத்தில் சைலண்ட் விசிட் : டிஜிபி சைலேந்திரபாபு வருகையால் காவல்துறை அலர்ட்!!

பல்லடம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் விசிட்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் காவல் நிலையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒன்பதே கால் மணி அளவில் பல்லடம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீரென வருகை தந்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து கோவை சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த அவர் கோவையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாக மதுரை செல்லும் வழியில் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீர் வருகை தந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களை பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், உதவியாளர் மற்றும் போலீசார் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உடன் போலீசார் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் வாகனத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

பல்லடம் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் வருகையால் பல்லடம் போலீசார் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.