Categories: தமிழகம்

சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளை திருடும் மர்ம கும்பல்: சிக்கிய சிசிடிவி காட்சி!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் சாலைகளில் படுத்திருந்த 8 மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையராக கீதா பொறுப்பேற்றார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் மீது சாலையில் சுற்றித்திரிந்த பன்றி மோதியதில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும், மீறுபவர்கள் மீது ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாக இருந்ததால் தொடர்ச்சியாக நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தன. மேலும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் படுத்து உறங்கின. இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் படுத்து உறங்கிய மாடுகள் 8க்கும் மேற்பட்டவையை மர்மநபர்களால் இரவு நேரங்களில் வாகனங்களில் கட்டி ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளுடன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KavinKumar

Recent Posts

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

22 minutes ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

53 minutes ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

2 hours ago

Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…

2 hours ago

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

3 hours ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

3 hours ago

This website uses cookies.