சென்னை: அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நேற்று இரவு அமைந்தகரை காவல்நிலைய காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களை நிறுத்தி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் அங்கு உள்ள சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த சபர் பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை கண்ட காவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று மயக்க நிலையில் இருந்த பாபுவை மீட்டு சாலையோரம் தூக்கிச் சென்றனர். பாபு மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்ததால் காவலர் ஒருவர் பாபுவின் மார்பில் கையை வைத்து அமுக்கி முதலுதவி அளித்து பாபுவை முழிக்க வைத்து காப்பாற்றினார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சற்றும் தாமதிக்காமல் முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.