Categories: தமிழகம்

மனைவி காணவில்லை என புகார் அளித்த இளைஞருக்கு போலீசார் மிரட்டல்? இளைஞரின் தந்தை மீது கொடூர தாக்குதல் : எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி : மனைவியை காணவில்லை என புகாரளித்த வாலிபரின் தந்தையை தாக்கியதாக கூறி காவல் ஆய்வாளர் மீது மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்தன் மகன் அந்தோனிமுத்து (வயது -25). இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் மகளிர் குழு கடன் வழங்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, குன்னூர் சந்தையை சேர்ந்த உறவுக்காரர் தனசேகரன் என்பவரின் மகள் ஞானதீபாவுக்கும் கடந்த 14/02/2021 ஆம் தேதியன்று தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வைத்து திருமணம் நடந்தது.

அதைத்தொடர்ந்து பெற்றோருடன் வசித்து வருகிறோம். தற்போது ஞானதீபா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் 15/06/2022 அன்று வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியபோது எனது மனைவி ஞானதீபா வீட்டில் இல்லாததை தொடர்ந்து, உறவினர்கள் வீட்டில் தேடிச் சென்றேன்.

அங்கு இல்லாததால் கடந்த 16/06/2022-ந் தேதியன்று முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தேன்.

அதன் பின்பு முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் எனக்கு போன் செய்து உன் மனைவி இங்குதான் இருக்கிறாள், உடனடியாக காவல் நிலையத்துக்கு வா என்று கூறினார். நான் எனது தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையம் சென்றேன்.

அங்கு காவல் ஆய்வாளர் உன் மனைவி உன்னுடன் வாழ விரும்பவில்லை அவள் வேறொருடன் செல்ல விரும்புகிறாள். இனி அவள் விசயத்தில் தலையிடாதே என்று கூறி என்னை மிரட்டினார். அப்பொழுது எனது தந்தை கேள்வி கேட்டதால் அவரை அடித்து கீழே தள்ளி விட்டார். இதில் காயமடைந்த எனது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே எனது தந்தையை தாக்கிய முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

8 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

9 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

9 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

10 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

11 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

11 hours ago

This website uses cookies.