Categories: தமிழகம்

மனைவி காணவில்லை என புகார் அளித்த இளைஞருக்கு போலீசார் மிரட்டல்? இளைஞரின் தந்தை மீது கொடூர தாக்குதல் : எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி : மனைவியை காணவில்லை என புகாரளித்த வாலிபரின் தந்தையை தாக்கியதாக கூறி காவல் ஆய்வாளர் மீது மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்தன் மகன் அந்தோனிமுத்து (வயது -25). இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் மகளிர் குழு கடன் வழங்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, குன்னூர் சந்தையை சேர்ந்த உறவுக்காரர் தனசேகரன் என்பவரின் மகள் ஞானதீபாவுக்கும் கடந்த 14/02/2021 ஆம் தேதியன்று தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வைத்து திருமணம் நடந்தது.

அதைத்தொடர்ந்து பெற்றோருடன் வசித்து வருகிறோம். தற்போது ஞானதீபா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் 15/06/2022 அன்று வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியபோது எனது மனைவி ஞானதீபா வீட்டில் இல்லாததை தொடர்ந்து, உறவினர்கள் வீட்டில் தேடிச் சென்றேன்.

அங்கு இல்லாததால் கடந்த 16/06/2022-ந் தேதியன்று முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தேன்.

அதன் பின்பு முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் எனக்கு போன் செய்து உன் மனைவி இங்குதான் இருக்கிறாள், உடனடியாக காவல் நிலையத்துக்கு வா என்று கூறினார். நான் எனது தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையம் சென்றேன்.

அங்கு காவல் ஆய்வாளர் உன் மனைவி உன்னுடன் வாழ விரும்பவில்லை அவள் வேறொருடன் செல்ல விரும்புகிறாள். இனி அவள் விசயத்தில் தலையிடாதே என்று கூறி என்னை மிரட்டினார். அப்பொழுது எனது தந்தை கேள்வி கேட்டதால் அவரை அடித்து கீழே தள்ளி விட்டார். இதில் காயமடைந்த எனது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே எனது தந்தையை தாக்கிய முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

7 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

8 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

8 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

9 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

9 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

10 hours ago

This website uses cookies.