புதுச்சேரியில் வீட்டிற்குள் வந்த் பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அக்குடும்பத்தினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மூலக்குளம் டீச்சர்ஸ் காலனி ரோஜா நகரில் ரமணி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அரசு ஊழியர்களான இவர்கள், வெளிநாட்டு ரகம் நாய்களான ராட் வில்லர் வகையை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டுள்ளனர்.
இந்தநிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரமணி, அதனை அங்குள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் நாய் சோர்வுடனே காணப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரமணி தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு செத்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, தனது வீட்டுக்குள் வந்த பாம்பிடம் அவரது இரண்டு வளர்ப்பு நாயும் சண்டையிடுவதும், அதில் மிஸ்டி பாம்பை வாயில் கவ்வி கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து, தனது நாய் பாம்பை கடித்து கொன்றதால் தான் சோர்வாக காணப்படுகிறது என்று எண்ணிய அவர், உடனடியாக மிஸ்டியை புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். தற்போது மிஸ்டி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இரண்டு நாய்களும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வீட்டுற்குள் செல்ல இருந்த பாம்பிடம் போராடி அதனை கடித்து கொன்ற நிகழ்வு ரமணி குடும்பத்தினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.