புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த தந்தை,மகன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மூகாம்பிகை நகரில் முருகன் கோவில் அருகே ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் லேப்டாப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததை கண்டனர். உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நாவற்குளம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற ஆறுமுகம்(49), இவரது மகன் ஈஸ்வர் (20), லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் மெயின் ரோட்டை சேர்ந்த மதிவாணன்(34) மற்றும் அரிபிரசாந்த்(27) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.24 ஆயிரம் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.