புதுச்சேரியில் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் முதியவர் ஒருவர் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்று காலை புதுச்சேரி ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறி நின்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர்.
பின்னர், போலீசார் அந்த முதியவரிடம் பேசி அவரை கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (65) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் எதற்காக புதுச்சேரி வந்துள்ளார். அவரின் உறவினர்கள் குறித்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறிய நின்ற காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.