இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. தற்போது முதல் பாகம் வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஹிந்தியில் அமிதாப்பச்சனும், தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் டிஜிட்டல் முறையில் டீசரை வெளியிடுகின்றனர்.
மேலும் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6:00 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெறுகிறது. அதில் படக் குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் டீசர் பரிசோதிக்கும் போது யாரோ வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.