இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. தற்போது முதல் பாகம் வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஹிந்தியில் அமிதாப்பச்சனும், தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் டிஜிட்டல் முறையில் டீசரை வெளியிடுகின்றனர்.
மேலும் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6:00 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெறுகிறது. அதில் படக் குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் டீசர் பரிசோதிக்கும் போது யாரோ வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.