தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான ‘பொன்னியின் செல்வன்’ படமானது வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது.
பொன்னியின் செல்வன் FDFSஐ ரசிகர்கள் தியேட்டரில் மேளம் அடித்தும் பட்டாசு வெடித்தும் கோவில் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் பிரமாண்டமாக இசையமைத்துள்ளார்.
அந்த வகையில் இப்படமானது வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படம் குறித்து திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர். எனினும் இப்படமானது ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைத் தான் பெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மக்கள் எந்தப் படம் வெளியாகினாலும் சரி எப்போதுமே அப்படத்திற்கு போஸ்டர் ஒட்டித் தான் தங்கள் அன்பு, கோபம் இரண்டையும் வெளிக்காட்டுவார்கள். அதே போல் பொன்னியின் செல்வன் படத்திற்கும் குறும்பான ஒரு போஸ்டர் ஒட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
அதாவது அப்போஸ்டரில் “சோழர்களே! பாண்டிய நாட்டுக்கு வந்தோமா, மீனாட்சியை கும்பிட்டோமா, தியேட்டரில் படத்தை ஒட்டினோமா, பரோட்டாவைத் திண்டோமான்னு போய்கிட்டே இருக்கணும், அதை விட்டிட்டு மறுபடியும் ஏதாவது எசக்கு பிசக்கா பண்ணனும் என்று நினைச்சீங்க அப்புறம் அவ்ளோ தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் உட்படப் பொதுமக்கள் அனைவரும் கோபப்படாமல், விழுந்து விழுந்து சிரித்து வருகின்றார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.