சென்னை : கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது மொத்த உயரம் 35 அடியில் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவினை கொண்டதாகும். இந்த நீர்த்தேக்கத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதலாக 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில், அதன் உயரத்தை அதிகரிக்க உலக வங்கியின் ஆலோசகர் சூப்பே குழுவினருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நீர்வரத்து, அணையின் பாதுகாப்பு, அணையில் இருந்து தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பும் முறைகள், கொசஸ்த்தலை ஆற்றின் நீர்வரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணா, கொசஸ்த்தலை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கும், பூண்டி நீர் தேக்கத்தின் உயரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி அதிகரிக்கவும், உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறினார்.
மேலும், சுற்றுலாத்துறை சார்பில் படகு போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், புதுச்சத்திரம் பகுதியில் 2015 கனமழையில் உடைந்த தடுப்பணை புதிதாக கட்டப்பட்ட பின், தற்போது அதன் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ததாகவும், அவர் தெரிவித்தார்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.