சென்னை : கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது மொத்த உயரம் 35 அடியில் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவினை கொண்டதாகும். இந்த நீர்த்தேக்கத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதலாக 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில், அதன் உயரத்தை அதிகரிக்க உலக வங்கியின் ஆலோசகர் சூப்பே குழுவினருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நீர்வரத்து, அணையின் பாதுகாப்பு, அணையில் இருந்து தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பும் முறைகள், கொசஸ்த்தலை ஆற்றின் நீர்வரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணா, கொசஸ்த்தலை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கும், பூண்டி நீர் தேக்கத்தின் உயரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி அதிகரிக்கவும், உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறினார்.
மேலும், சுற்றுலாத்துறை சார்பில் படகு போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், புதுச்சத்திரம் பகுதியில் 2015 கனமழையில் உடைந்த தடுப்பணை புதிதாக கட்டப்பட்ட பின், தற்போது அதன் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ததாகவும், அவர் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.