கன்னியாகுமரி : நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பாஜகவின் மகளிரணியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரியின் மகளின் திருமணநிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது இந்த திருமணத்தில் தமிழ் கலாச்சாரபடி தமிழில் மந்திரங்களை ஓதி திருமணம் நடைபெற்றது.
திருமணவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருமண வீட்டார் பாரதியார் புத்தகங்களை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு மணமக்களை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பவர்ணமி நாளில் கன்னியாகுமரியில் நடந்து வரும் கடல் ஆரத்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவும் கங்கா ஆரத்தி போன்றது. இதன் மூலம் இளைஞர்களுக்கு நதி நீரின் முக்கியத்துவம் பற்றி தெரிவதற்கும் நதி நீரை சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் இளைஞர்களிடையே வளரும்.
தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழியை விருப்பப்பட்டால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் மக்களுக்கான பெயர் பலகை கூட தமிழில் தான் உள்ளது இதனை நாம் ஒரு உறுதி செய்துள்ளோம்.
நாம் நமது மொழியை பாராட்டும் அதே வேளையில் அடுத்த வரும் மொழியை பறிப்பது அல்லது அவர்களது தொழிலை குறைவாக மதிப்பிடுவது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல. இன்னொரு மொழியை படிப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அது பயனுள்ளதாக அமையும்.
எங்கும் இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஆன்மீக தமிழ் உள்ளது. ஆன்மிகத்தை விடுத்து தமிழ் கிடையாது. எனவே தமிழின் பெருமையை நாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.