Categories: தமிழகம்

தமிழக மாணவிக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது : ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவிப்பு

விருதுநகர் : வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்த மருத்துவர் நரேஷ் குமார்- மருத்துவர் சித்திர கலாவின் மகள் விசாலினி. தற்போது 8 வயதாகும் இவர், தனது 6 வயதில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது மக்களின் உயிரும் உடைமையும் பறிபோவதை எண்ணி கவலையுற்று வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களையும் அவர்தம் உடைமைகளையும் பாதுகாக்கும் படியான ஒரு பலூன் வீட்டை உருவாக்கினார். அதற்கு ‘ஒரு தானியங்கி பல செயல்பாட்டு வாழ்க்கை மீட்பு வெள்ளம் வீடு’ என்ற தலைப்பில் ஒரு கண்டுபிடிப்பு காப்புரிமை தாக்கலை, செப்டம்பர் 23, 2020 அன்று இந்திய காப்புரிமை அலுவலகத்தில் செய்தார்.

அதை ஏற்று இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை மே 10, 2021 அன்று இந்திய அரசால் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை செப்டம்பர் 23, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையான வீடுகள் கடல் பகுதிக்கு அருகில் வசிக்கும் மீனவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரியவருகிறது. இவரின் இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022 இன் கீழ் ‘இளைய காப்புரிமை வைத்திருப்பவர்’ என்ற தலைப்பில் இந்த மைல்கல்லை அங்கீகரித்து, இணங்கி, இறுதி செய்தது. மேலும் இந்திய பதிவேடுகள் புத்தகம்,

இந்தியாவில் தனது 6 வயதில் காப்புரிமை பெற்ற ஒரே ஒருவர் விஷாலினி, இந்தியாவில் முதல் மற்றும் உலகின் இரண்டாவது இளம் வயதில் காப்புரிமை வைத்திருப்பவர் என பெயரிட்டு காப்புரிமையும் பெற்றுள்ளார். இவரின் திறமையையும் ஆர்வத்தையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசால் ‘ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது’ அறிவிக்கப்பட்டது. அந்த விருதை,விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி காட்சி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி சிறுமி விசாலினியை வாழ்த்தி விருது வழங்கினார்.மேலும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

KavinKumar

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

5 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

6 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

6 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

6 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

7 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

8 hours ago

This website uses cookies.