கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவ,மாணவிகள் பயிலும் அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை ரூபாய் 3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகளை துவக்கியது.
கோவையை சேர்ந்த மார்ட்டின் குரூப் ஆப் நிறுவனத்தினர் தங்களது அறக்கட்டளை வாயிலாக மருத்துவம், கல்வி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்க பள்ளியை தத்தெடுத்த மார்ட்டின் அறக்கட்டளையினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை வசதிகள், நவீன கணிணி லேப் மற்றும் அறிவியல் லேப் என ரூபாய் மூன்று கோடி செலவில் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை துவக்கினர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், அறக்கட்டளை நிர்வாகிகள் லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.