Categories: தமிழகம்

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை விற்பனை செய்யும் தனியார் : சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

பழனி : உச்சவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி பெரியம்மாபட்டி பகுதியில் உச்சரவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காலை பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் திடீரென அவர்கள் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரியம்மாபட்டி பகுதியில் அரசின் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு வழங்கிய நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் போலி பட்டா மூலம் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநில அரசில் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நிலங்களை மீட்டு தர வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், தாசில்தார் சசிக்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.