தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் கூட்டணியான செல்வராகவன் மற்றும் தனுஷ் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.
அதன் காரணமாகவே இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல பேட்டிகளை கொடுத்துவருகின்றார்.
அந்த வகையில் ஒரு பேட்டியில் கமலின் ஆளவந்தான் படத்தைப்பற்றி பேசியுள்ளார் தாணு. கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலின் கதை மற்றும் திரைக்கதையில் உருவான ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்திருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அப்படம் லாபகரமான படமாக அமையவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய தாணு, அன்று வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கமலின் திரைக்கதை தவறாகிவிட்டது.
எனவே இன்று ஆளவந்தான் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் தயார் செய்து 2 மணி நேர படமாக வெளியிட்டால் தலை தெறிக்க ஓடும். அதன் மூலம் நான் இழந்த பணத்தை கூட திரும்ப பெற்றுவிடுவேன் என்றார் தாணு.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.