தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் கூட்டணியான செல்வராகவன் மற்றும் தனுஷ் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.
அதன் காரணமாகவே இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல பேட்டிகளை கொடுத்துவருகின்றார்.
அந்த வகையில் ஒரு பேட்டியில் கமலின் ஆளவந்தான் படத்தைப்பற்றி பேசியுள்ளார் தாணு. கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலின் கதை மற்றும் திரைக்கதையில் உருவான ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்திருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அப்படம் லாபகரமான படமாக அமையவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய தாணு, அன்று வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கமலின் திரைக்கதை தவறாகிவிட்டது.
எனவே இன்று ஆளவந்தான் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் தயார் செய்து 2 மணி நேர படமாக வெளியிட்டால் தலை தெறிக்க ஓடும். அதன் மூலம் நான் இழந்த பணத்தை கூட திரும்ப பெற்றுவிடுவேன் என்றார் தாணு.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.