“அந்த படம் தலை தெறிக்க ஓடும்.. நான் இழந்த பணத்தை திரும்ப பெற்றுவிடுவேன்”: நானே வருவேன் தயாரிப்பாளர் நம்பிக்கை ..!

Author: Vignesh
29 September 2022, 12:00 pm
Quick Share

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் கூட்டணியான செல்வராகவன் மற்றும் தனுஷ் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

அதன் காரணமாகவே இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல பேட்டிகளை கொடுத்துவருகின்றார்.

அந்த வகையில் ஒரு பேட்டியில் கமலின் ஆளவந்தான் படத்தைப்பற்றி பேசியுள்ளார் தாணு. கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலின் கதை மற்றும் திரைக்கதையில் உருவான ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அப்படம் லாபகரமான படமாக அமையவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய தாணு, அன்று வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கமலின் திரைக்கதை தவறாகிவிட்டது.

எனவே இன்று ஆளவந்தான் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் தயார் செய்து 2 மணி நேர படமாக வெளியிட்டால் தலை தெறிக்க ஓடும். அதன் மூலம் நான் இழந்த பணத்தை கூட திரும்ப பெற்றுவிடுவேன் என்றார் தாணு.

Views: - 352

0

0