போலி கையெழுத்திட்டு 15 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிப்பு முயற்சி செய்வதாக தம்பதியினர் கண்ணீர் மல்க காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தன்னுடைய மனைவியுடன் காவல்துறை ஆணையரிடம் கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தார்.தொடர்ந்து மனு அளித்தப்பின் பேசிய மணி தன்னுடன் கோவை பச்சாப்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருடன் இணைந்து கடந்த 30வருடங்களாக மோட்டார் பம்ப் செட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.
மாகலிங்கம் மற்றும் அவரது மகன் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தன்னை தொழில் நிறுவனத்திற்க்குள் விடாமல் மிரட்டி வந்ததால் ,கூட்டாக வாங்கிய சொத்தினை பிரித்து தனது பாகத்தை தர கோரி கோவை நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சப்ளிமெண்ட் பார்ட்னர்ஜிப் பத்திரம் மற்றும் ரிட்டையர்மெண்ட் பத்திரத்தில் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு 15கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்து செய்து விட்டதாகவும்,இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.