Categories: தமிழகம்

வெப்சைட் மூலம் விபச்சாரம்… வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி செய்த வியாபாரம் : 3 அழகிகளுடன் ஸ்பா ஊழியர்கள் கைது!!

புதுச்சேரி : வெப்சைட் மூலம் விபச்சாரம் செய்து வந்த ஸ்பா ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து 3 அழகிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மசாஜ் சென்டர் (ஸ்பா) ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தன்வந்திரி நகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக நூழைந்த போலிசார் அங்கு விபச்சாரம் நடைபெற்றதற்கான ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் போலீசார் கையில் சிக்கியதை அடுத்து மசாஜ் சென்டரின் ஊழியர்களான திருப்பத்தூரை சேர்ந்த மகி (வயது 32) கள்ளக்குறிச்சியை சேர்ந்த தூயா (எ) தூய நெஞ்சன் (வயது 21), ஆகியோரை கைது செய்து, அங்கிருந்த 3 அழகிகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்,

இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களுருவை சேர்ந்த பபிதா புதுச்சேரி வைத்திகுப்பத்தை சேர்ந்த தனது கணவர் சிவராஜியுடன் இணைந்து ஸ்பா மசாஜ் செண்டர் வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளதாகவும், இவர்கள் கள்ளக்குறிச்சி, பெங்களுரு என பல்வேறு பகுதிகளை சேர்ந்த அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதும் இதற்காக அவர்கள் லொகேண்டோ என்கிற வெப்சைட்டில் தங்களை பதிவு செய்து உள்ளதாகவும் இந்த வெப்சைட்டில் பல்வேறு மாநிலத்தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்,.

இந்த வெப்சைட்டிற்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் புதுச்சேரி என்று க்ளிக் செய்யும்போது, அவர்களுக்கு ஒரு செல்போன் எண் காண்பிக்கும், அந்த செல்போன் எண்ணில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும்போது சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரின் செல்போனுக்கு லோக்கேஷன் ஷேர் செய்யப்பட்டு அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் மகி, தூயநெஞ்சன், ஆகியோர் தங்களது வாகனங்களில் சென்று அழைத்து வருவார்கள் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு கண்காணிப்பாளர் பக்தவச்சலம் தலைமறைவாக உள்ள சிவராஜ்-பபிதா தமபதியினர் மற்றும் அவர்களுக்கு மசாஜ் செண்டர் நடத்த வீடு வாடகைக்கு கொடுத்த அதன் உரிமையாளர் சாரம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகியோரை தேடி வருவதாகவும், தம்பதியினர் மீது ஏற்கனவே பெரியகடை மற்றும் லாஸ்பேட்டை காவல் நிலையங்களில் விபாசார வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் தொடர் விபச்சாரத்தில் ஈடுப்படுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாயும் என்றும், அதிக அட்வான்ஸ், வாடகை கிடைக்கிறது என்று சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கு வீடு மற்றும் இடங்கள் வாடகை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், வடக்கு காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்களை போலிசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்..

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

9 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

10 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

10 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

11 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

11 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

12 hours ago

This website uses cookies.