புதுச்சேரி : அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து குழு அமைத்து விசாரணை செய்ய பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்து மாணவி பள்ளிக்கு வந்ததாகவும், ஹிஜாபுடன் வகுப்பறையில் அமர்ந்ததால் அதற்கு தடை விதித்ததாக புகார் எழுந்தது. புகாரையடுத்து பல்வேறு மாணவர் கூட்டமைப்பு மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, அவர்கள் பெற்றோரிடம் புகார் அளித்ததாகவும், அது தற்போது வெளியே கசிந்து இதுமாதிரி புகாராக வந்துள்ளதாக தெரிவித்து அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேலும் இதுபோன்று புகார் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்பில் குழு ஒன்று அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவாகாமி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.