கொல்லம் – சென்னை விரைவு ரயில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், அதனை காப்பாற்றிய ஊழியருக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளது.
கேரளா – கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி தென்காசி வழியாக சென்ற கொல்லம் – சென்னை விரைவு ரயில் செங்கோட்டை ரயில்நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. அப்போது, வழக்கம் போல, ரயில் பெட்டிகளை ரயில் பெட்டி பராமரிப்பாளரான ரகுபதி என்பவர் சோதனை செய்தார்.
அப்போது, கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் எஸ் 3 பெட்டியின் அடிப்பாகத்தில் மிகப்பெரிய அளவிலான விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்து கூறியதால், மிகப்பெரிய அளவிலான விரிசலால் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியில் இருந்த விரிசலை கண்டுபிடித்த ரயில்வே ஊழியர் ரகுபதியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருக்கு ரூ. 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாதுகாப்பு விருது வழங்கி கௌரவித்தார்.
ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான நிலையில் கொல்லம் ரயிலில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக கண்டறிந்ததன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருப்பது அனைவரிடத்திலும் பெருமூச்சை விடச் செய்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.