தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு பஸ்சில் மேற்கூரையில் ஆங்கங்கே இருந்த ஓட்டையின் வழியாக மழைநீர் உள்ளே வந்தால் இருக்கை முழுவதும் நனைந்து பயணிகள் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு பசுவந்தனையில் இருந்து தினமும் இரவில் அரசு பஸ் ஒன்று வருவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல அந்த அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழைநீர் பஸ்சிற்குள் விழுந்துள்ளது. பஸ்சில் மழைநீர் விழுந்து இருக்கைகள் முழுவதும் நனைந்தால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்போது, அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய நடத்துநர், “மக்கள் யாரும் ஓசியில் வரவில்லை. பலமுறை சொல்லியும் மேற்கூரையில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,” என அந்த அரசு பஸ் நடத்துனர் புலம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.