சென்னையில் இருந்து இன்று காலை கன்னியாகுமரி வந்த அதிவிரைவு ரயிலின் ஏசி கோச் பெட்டியில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரிக்கு ரயில்கள் அதிகம் சென்று வருகின்றன. அந்த வகையில், நேற்று மாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை இந்த ரயில் புறப்பட்டது. ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
இந்நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று இரவிலும் ரயில் செல்லும் இடங்களில் மழை பெய்தது. இந்த வேளையில் சென்னை -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் மேல் இருந்து மழைநீர் கசிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை அதிகரித்த நிலையில் ரயிலின் மேற்கூரையில் இருந்து மழை நீர் அதிகமாக கொட்ட ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னை-கன்னியாகுமரி ரயிலின் ஏசி பெட்டியில் மழைநீர் கசிந்த வீடியோவை பயணி ஒருவர் எடுத்துள்ளார். தற்போது வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.