பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியரின் வீடியோ சமூகவலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
தமிழகத்தில் காவல் துறையின் உயர் அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு வரும் கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையாக நடக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த கரிகாலன் என்ற போலீசாரை ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பணியில் இருந்த போலீசார், அவரை இது மருத்துவமனை பகுதி சற்று தள்ளி நின்று தொலைபேசி பேசுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், “நீ வந்தாலும் உன்னை அடிப்பேன். என்னை உள்ளே தூக்கிப் போடு. நீ போலீசாக இருந்தால் நான் பயப்பட மாட்டேன். கொன்னுடுவேன் எவனா இருந்தாலும்.. அடி, அடி…,’ என்று கூறி அலப்பறை செய்துள்ளார்.
மிரட்டும் தொனியில் போலீசாரை மிரட்டும் இந்த வீடியோவை அருகிலிருந்தவர்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே, இதுகுறித்து போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் நகராட்சி ஊழியர் என தெரியவருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி போலீசார் வருகின்றனர்.
பணியிலிருந்த போலீஸாரை நபர் ஒருவர் அநாகரீகமாக மிரட்டும் தொனியில் பேசிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.