பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியரின் வீடியோ சமூகவலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
தமிழகத்தில் காவல் துறையின் உயர் அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு வரும் கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையாக நடக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த கரிகாலன் என்ற போலீசாரை ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பணியில் இருந்த போலீசார், அவரை இது மருத்துவமனை பகுதி சற்று தள்ளி நின்று தொலைபேசி பேசுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், “நீ வந்தாலும் உன்னை அடிப்பேன். என்னை உள்ளே தூக்கிப் போடு. நீ போலீசாக இருந்தால் நான் பயப்பட மாட்டேன். கொன்னுடுவேன் எவனா இருந்தாலும்.. அடி, அடி…,’ என்று கூறி அலப்பறை செய்துள்ளார்.
மிரட்டும் தொனியில் போலீசாரை மிரட்டும் இந்த வீடியோவை அருகிலிருந்தவர்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே, இதுகுறித்து போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் நகராட்சி ஊழியர் என தெரியவருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி போலீசார் வருகின்றனர்.
பணியிலிருந்த போலீஸாரை நபர் ஒருவர் அநாகரீகமாக மிரட்டும் தொனியில் பேசிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.