Categories: தமிழகம்

மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்

புதுச்சேரி : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சார்ந்த 9 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 31ஆம் இரவு கோடியக்கரை கடற்பகுதியில் 9 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதில் 3 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 6 மீனவர்கள் தமிழகப் பகுதியையும் சார்ந்தவர்கள். அவர்களது இயந்திரப் படகோடு, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். பிடித்துச் செல்லப்பட்ட 9 மீனவர்களையும் விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

KavinKumar

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

12 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

12 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

12 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

13 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

14 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

14 hours ago

This website uses cookies.