ராணிப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு திருவள்ளூர் போலீசார் என கூறி ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், மறுநாள் காலையில் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு சுடுகாட்டு பகுதியில் சரத்குமார் கை மற்றும் இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பாணாவரம் போலீஸாரால் சடலமாக மீட்கப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியம் உத்தரவின் பேரில், இரண்டு டிஎஸ்பி தலைமையிலான இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் இந்த படுகொலையானது, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவுடி நித்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் முன் விரோத காரணமாகவும் நடைபெற்று இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேல் வீராணம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராமச்சந்திரன் என்ற குற்றவாளி ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை பிடித்த தனிப்படை போலீசார், அவர்களை தக்கோலம் காவல் நிலையத்தில் வைத்து எவ்வாறு கொலை அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.